”கலிகாலம்யா” - 24 வயது காதலரை சேர்த்து வைக்க போலீஸில் முறையிட்ட 50 வயது காதலி
அகமதாபாத்: அகமதாபாத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலரான 24 வயது இளைஞருடன் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருடனேயே வந்து அளித்த புகாரால் போலீசார் அதிர்ந்து போனார்கள்.
குஜராத்தின் மணிநகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு தனது கணவருடன் வந்த ஆஷா என்ற அந்த 50 வயது பெண் , ரிக்சா டிரைவரான 24 வயதுடைய தனது காதலனான ஜிக்னேஷ் அவரது திருமணத்திற்கு பின் தன்னை மறந்து விட்டதாக தெரிவித்தார். மீண்டும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜிக்னேஷ் மீது ஈர்ப்பு:
இதுபற்றி போலீசார் கூறுகையில், "ஆஷா ஒரு முறை அங்குள்ள கோவிலுக்கு செல்ல ரிக்சாவில் சென்ற போது ஜிக்னேசின் செயல்பாடு அவளை ஈர்த்துள்ளது. அதனால் அவனது செல்போன் எண்ணை கேட்டு வாங்கியுள்ளார் ஆஷா. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
முறிந்த உறவு:
கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆஷாவை சந்தித்த ஜிக்னேஷ் தனது பெற்றோர் தனக்கு பார்த்து வைத்துள்ள பெண்ணை மணக்கப்போவதாகவும் தங்களது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏமாந்த ஆஷா:
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆஷா தன்னை ஜிக்னேஷ் ஏமாற்றி விட்டதுடன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் கருதினார். இந்த நேரத்தில் ஆஷாவின் கணவருக்கும் அவரது காதல் விஷயம் தெரிந்துவிட்டது.
கண்டித்த கணவர்:
அவர் ஆஷாவிடம் இம்மாதிரியான செயல் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறி இந்த காதலை கைவிடுமாறு கூறினார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் தான் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கைவிட்ட போலீஸ்:
முதலில் எப்படியாவது ஆஷாவுக்கு உதவவேண்டும் என நினைத்த போலீசார் ஜிக்னேசுக்கு திருமணமான செய்தி தெரிந்தவுடன் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர். இதனால் அவனது திருமண வாழ்க்கை முறிந்துபோய் விடும் என கருதி தங்களது முடிவை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications