For Daily Alerts
Just In
ஆந்திரா வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் ஏரியில் மூழ்கி பலி
ஆந்திராவில் ஏரியில் மூழ்கி 7 பேர் தற்கொலை செய்துக் கொண்டனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடப்பா: ஆந்திர வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் கடப்பா மாவட்டத்தில் ஒண்டிமிட்டா ஏரியில் மூழ்கி இறந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக போலீஸார் சென்றபோது அங்கு கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் தப்பியோடினர்.
அவர்கள் 7 பேரையும் விரட்டி சென்றபோது கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 பேரும் தவறி விழுந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
Comments
English summary
7 drown in lake in Andhra pradesh's Kadappa District. Police enquires whether they belongs to Tamilnadu?