பர்னிச்சர் வியாபாரி குடும்பத்தில் பயங்கரம்..ஒரே வீட்டில் ஏழு பேர் தற்கொலை..உருக்கமான கடிதம்சிக்கியது
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பர்னிச்சர் வியாபாரி குடும்பத்தில் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினர் ஆறு பேர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் தூக்கி தற்கொலை செய்திருப்பது குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகதன்காவைச் சேர்ந்தவர் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா, இவர்களுக்கு திஷா, காவ்யா மற்றும் குஷால் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சூரத்தின் அடாஜன் பகுதியில் உள்ள சித்தேஷ்வர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் மணீஷ் சோலங்கியின் தந்தை கானு, தாய் ஷோபா ஆகியோரும் வசித்து வருகிறார்கள்.

மணீஷ் சோலாங்கி சூரத்தின் பலன்பூர் பகுதியில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்கள். கட்டில், பீரோ, கதவு, ஜன்னல், சோபா, சேர்கள் உள்பட பல்வேறு பர்னிச்சர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவரிடம் 35 பேர் வேலை செய்து வந்தார்கள். இந்நிலையில் இன்று காலை மணிஷ சோலாங்கிக்கு தொழிலாளர்கள் போனில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. வீட்டிற்கு அழைத்தால் அங்கும் யாருமே போனை எடுக்கவில்லை..இதையடுத்து வீட்டிற்கு போய் பார்த்துள்ளார்கள்.. வீட்டில் யாருமே கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், மணீஷின் வீட்டில் ஜன்னலை உடைத்து பார்த்த போது அவர்கள் அனைவரும் பிணமாக கிடந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சூரத் போலீசார் சம்பவம் நடந்த பலன்புர் அடாஜன் பகுதியில் உள்ள சித்தேஷ்வர் குடியிருப்பிற்கு விரைந்து வந்தனர். அங்கு பர்னிச்சர் வியாபாரி மணீஷ் சோலங்கியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து கிடந்தனர். - திஷா, காவ்யா மற்றும் குஷால் என மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். மணீஷ் சோலங்கி மட்டும் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அனைவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மணீஷ் சோலங்கி குடும்பத்துடன் இறந்தது குறித்து இதுவரை எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து மணீஷ் சோலங்கி எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் கடன் தொல்லை காரணமாக இந்த துயர முடிவினை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று யார் பெயரையும் குறிப்பிடவில்லை.. கடன் அதிக அளவில் வாங்கி தொழில் செய்த மணீஷ் சோலங்கி, நஷ்டம் அடைந்த நிலையில், பண நெருக்கடியில் தவித்து வந்துள்ளார். இதனால் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தினர் 7 பேர் தற்கொலை செய்த சம்பவம் குஜராத்தின் சூரத் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications