7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை... தீ வைத்து எரிக்கவும் முயற்சி - 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பிவாண்டி : மகாராஷ்டிராவில் ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, தீயிட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிகாண்டி நகரில், பத்மநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று சமபோஜன விருந்து ஒன்று நடந்தது. இதில் சாப்பிடுவதற்காக 7 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான்.

{ventuno}

அப்போது அவனை ஏமாற்றிப் பேசி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற இரண்டு பேர் அவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் அச்சிறுவனை தீ வைத்துக் கொல்ல முயற்சித்துள்ளனர்.

30 சதவீத தீக்காயங்களோடு அவர்களிடமிருந்து தப்பிய சிறுவன், ஊர்மக்கள் மீட்டு தானே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+