சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்து பெங்களூர் டொயோட்டா நிறுவன ஊழியர்கள் 7 பேர் சாவு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே ஏரியில் கார் கவிழ்ந்ததில் பெங்களூரை சேர்ந்த டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவன ஊழியர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரையடுத்த பிடதி தொழில்பேட்டையில் உள்ளது டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம். இங்கு பணியாற்றும், சுமார் 10 ஊழியர்கள் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு ஸ்கார்பியோ காரில் சிக்கமகளூருக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த கார் நள்ளிரவு 1.20 மணி்க்கு ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டனா தாலுகாவிலுள்ள ஜானவாரா என்ற கிராமத்தின் அருகில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஏரியில் விழுந்தது.
2 மணி நேரங்கள் கழித்த பிறகே, சிலர், ஏரியில் கார் மிதப்பதை பார்த்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்து அதை வெளியே எடுத்துள்ளனர். அதற்குள், உள்ளேயிருந்த 7 பேர் உயிரிழந்திருந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அவர்கள் ஐசியூவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கார்த்திக் (23), சதீஷ் (24), ஜனார்தன் (22), திலீப் (24), ஜெயந்த் (23), சிவசாமி (24), ராஜு (24) என தெரியவந்துள்ளது. பிரசாந்த், பிரசன்னா, ரகு ஆகிய மூன்று பேர் சிகிச்சை பெற்றுவருபவர்கள் பெயர்களாகும்.
ஏரி கரையில் தடுப்புவேலி அமைக்காமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications