நாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி
அசாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோஹிமா: நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் அமைப்பு நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) பிரிவு. தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தினர் சீனா, மியான்மரில் முகாம்களை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அமைப்பைத் தவிர பிற நாகாலாந்து தனிநாடு கோரும் இதர குழுக்களுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) பிரிவு தீவிரவாதிகள் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் இத்தாக்குதலை நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் பலியாகினர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு தாக்குதலை நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) பிரிவு தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர். அதில் 8 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications