மேற்கு வங்கம்: ஓடும் ரயிலில் சக்திவாய்ந்த 8 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து அம்மாநிலத்தின், மற்றொரு நகரான நியூ ஜல்பைகுரிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தனது பயணத்துக்கு நடுவே, இடையே பீகார் மாநிலத்தின் சில பகுதிகளையும் கடந்து செல்லும். இன்று இந்த ரயில் பீகார் மாநிலம் கிருஷன்கஞ்ச் ரயில் நிலையத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென, ரயிலை நிறுத்தி, பீகார் காவல்துறை, ரிசர்வ் போலீஸ் படை, ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றில், சீட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த எட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி அலோக் பிரசாத் சிங் கூறியது: வெடிகுண்டுடன் இந்த ரயிலில் சிலர் பயணிப்பதாக, போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இச்சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications