ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த 8 ம.ஜ.த எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: தேவகவுடா அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு காலியாகும் 4 இடங்களுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை பெங்களூரிலுள்ள மாநில தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்ணான்டஸ் மற்றும் ராமமூர்த்தி ஆகிய 3 வேட்பாளர்களும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் களமிறக்கப்பட்டனர். ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க 45 வாக்குகள் தேவை.

40 எம்எல்ஏக்களை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதாதளமும் (ம.ஜ.த), சுயேச்சைகளை நம்பி பாரூக் என்பவரை தனது வேட்பாளராக களமிறக்கியது. ஆனால், பாரூக்கிற்கு, 33 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அவர் தோற்றார். பிற கட்சி வேட்பாளர்கள் எதிர்பார்த்தபடி ஜெயித்தனர்.
ம.ஜ.தவில் 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ராமமூர்த்திக்கு வாக்களித்தனர். அதேநேரம் சுயேச்சை ஒருவரின் வாக்கு ம.ஜ.தவுக்கு கிடைத்துள்ளது.
காங்கிரசுக்கு வாக்களித்ததோடு, அதை பகிரங்கமாகவே 8 எம்எல்ஏக்களும் ஒப்புக்கொண்டனர். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப்போட்டதால் அக்கட்சியின் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமை தாங்கினார். கட்சி மாறி ஓட்டுப்போட்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜமீர்அகமது கான், செலுவராயசாமி, பாலகிருஷ்ணா, இக்பால் அன்சாரி, அகண்ட சீனிவாசமூர்த்தி, கோபாலய்யா, பீமா நாயக், ரமேஷ் பன்டிசித்தேகவுடா ஆகியோரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்று தீர்மானித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருமே 2018 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜமீர் அகமது கான், செலுவராய சாமி, பாலகிருஷ்ணா ஆகியோர், கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள். நேற்றைய கூட்டத்தில் குமாரசாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications