88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்து தண்டனை... பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடூரம்
அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகள் ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

கவுகாத்தி: அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகள் ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இட்டா நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் மாணவிகள் செய்த சிறிய தவறு ஒன்றிற்காக இந்த கொடூரமான தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தண்டனையை மூன்றும் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவிகளுக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அருணாசல பிரதேசத்தில் இருக்கும் அந்த பள்ளி மிகவும் புகழ்பெற்ற பள்ளியாகும்.
தற்போது அந்த ஆசிரியர்களின் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மேலும் அனைவரிடமும் இதுகுறித்த வாக்குமூலம் வாங்கப்பட்டு இருக்கிறது.

மாணவிகளுக்கு தண்டனை
அருணாசல பிரதேசத்தின் இட்டா நகரில் இருக்கிறது 'கஸ்தூரிபா காந்தி பாலிக்க வித்தியாலயா' என்ற அந்த புகழ்பெற்ற பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் 8 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகள் 88 பேருக்கு மிகவும் மோசமான தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அந்த மாணவிகள் அனைவரும் மற்ற பள்ளி மாணவிகள் முன்னிலையில் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொடூரமான செயலை அந்த பள்ளியில் நிரந்தர பணியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருக்கும் ஒரு ஆசிரியரும் சேர்ந்து செய்துள்ளனர்.

காரணம் என்ன
அந்த பள்ளியில் படிக்கும் எதோ ஒரு மாணவியை பற்றியும், அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றியும் தவறாக யாரோ லெட்டர் எழுதி இருக்கிறார்கள். அந்த லெட்டர் 7ம் வகுப்பிற்கு, 8ம் வகுப்பிற்கு இடையில் தரையில் கிடந்து இருக்கிறது. இதை எழுதியது யார் என்று தெரியாததால் இரண்டு வகுப்பிலும் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் சேர்த்து தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

தாமதமான புகார்
இந்த சம்பவம் குறித்து மாணவிகள் யாரும் வெளியில் வாய் திறக்க கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை அந்த 88 மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அருணாசல பிரதேச பள்ளி கல்வித்துறையிடம் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

போலீஸ் நடவடிக்கை
இவர்கள் மீதான புகார் இட்டா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்த ஆசிரியர்கள் மீது தற்போது வழக்கும் பதியப்பட்டு இருக்கிறது. இன்று மாலைக்குள் அந்த மூன்று பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று இட்டா நகர் பகுதியின் உதவி காவல் ஆணையர் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications