மதுவை வாயில் ஊற்றி.. இருட்டில் நீண்ட கைகள்! ஆண்டனியான ஆட்டோக்காரர்! மயங்கி சரிந்த பெண், பதறிய போலீஸ்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் உதய்பூரில் ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது.
படிப்பறிவில் பின்தங்கியுள்ள பீகார் ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகரான டெல்லி ஜார்கண்ட் ஒடிசா ஆகிய மாநிலங்களில் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெளி உலகுக்குத் தெரிந்தது மட்டும்தான்.

பாலியல் பலாத்காரம்
உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில் பெண்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான குற்றம் பதிவாகியுள்ளது. அங்கு ஒரு ஆடம்பரமான மாளிகைகள் நிரம்புயுள்ள காலனிக்கு அருகிலுள்ள .ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர் ரெட்டி ஸ்டாண்ட் சந்தையில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த குற்றம் நடந்துள்ளது. நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் சர்வசாதாரணமாக இருப்பதால் அதில் இரண்டு பயணிகளுடன் ஒரு ஆட்டோவைப் பார்த்து, சவினா காலனியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக அவர் வாகனத்தில் ஏறினார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
கிரிஜா வியாஸ் பெட்ரோல் பங்கில் அவருக்கு முன் மற்ற இரண்டு பயணிகள் இறங்கினர். பயணிகளை இறக்கிவிட்ட பிறகுதான் அப்பெண்ணுக்கு அந்த அவலம் அரங்கேறியது. போலீசார் அளித்த தகவலின்படி, ஆட்டோ டிரைவர் தனது வாகனத்தில் பெண் தனியாக இருப்பதைக் கண்டு, மதுபானக் கடையில் நிறுத்தி, நண்பரை அழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் இருவரும் அப்பெண்ணை தாக்கி, விஐபி காலனிக்கு அருகில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு மது அருந்த வைத்து, மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீசார் விசாரணை
கொடூரமான குற்றத்தைச் செய்யும் போது, ஆட்டோ டிரைவர் மேலும் தனது சில நண்பர்களை வரவழைத்து அப்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அப்பெண் உதவிக்காக கூச்சலிட்ட போதும், ஆனால் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்ததால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் நான்கு பேரும் அப்பெண்ணை வண்டில் ஏற்றி நகருக்குள் வந்ததும், தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் எப்படியோ ஒரு காவல் நிலையத்தை அடைந்து பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications