மதுவை வாயில் ஊற்றி.. இருட்டில் நீண்ட கைகள்! ஆண்டனியான ஆட்டோக்காரர்! மயங்கி சரிந்த பெண், பதறிய போலீஸ்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் உதய்பூரில் ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது.
படிப்பறிவில் பின்தங்கியுள்ள பீகார் ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகரான டெல்லி ஜார்கண்ட் ஒடிசா ஆகிய மாநிலங்களில் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெளி உலகுக்குத் தெரிந்தது மட்டும்தான்.

பாலியல் பலாத்காரம்
உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில் பெண்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான குற்றம் பதிவாகியுள்ளது. அங்கு ஒரு ஆடம்பரமான மாளிகைகள் நிரம்புயுள்ள காலனிக்கு அருகிலுள்ள .ஒதுக்குப்புற இடத்தில் 25 வயது பெண் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர் ரெட்டி ஸ்டாண்ட் சந்தையில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த குற்றம் நடந்துள்ளது. நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் சர்வசாதாரணமாக இருப்பதால் அதில் இரண்டு பயணிகளுடன் ஒரு ஆட்டோவைப் பார்த்து, சவினா காலனியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக அவர் வாகனத்தில் ஏறினார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
கிரிஜா வியாஸ் பெட்ரோல் பங்கில் அவருக்கு முன் மற்ற இரண்டு பயணிகள் இறங்கினர். பயணிகளை இறக்கிவிட்ட பிறகுதான் அப்பெண்ணுக்கு அந்த அவலம் அரங்கேறியது. போலீசார் அளித்த தகவலின்படி, ஆட்டோ டிரைவர் தனது வாகனத்தில் பெண் தனியாக இருப்பதைக் கண்டு, மதுபானக் கடையில் நிறுத்தி, நண்பரை அழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் இருவரும் அப்பெண்ணை தாக்கி, விஐபி காலனிக்கு அருகில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு மது அருந்த வைத்து, மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீசார் விசாரணை
கொடூரமான குற்றத்தைச் செய்யும் போது, ஆட்டோ டிரைவர் மேலும் தனது சில நண்பர்களை வரவழைத்து அப்பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அப்பெண் உதவிக்காக கூச்சலிட்ட போதும், ஆனால் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்ததால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் நான்கு பேரும் அப்பெண்ணை வண்டில் ஏற்றி நகருக்குள் வந்ததும், தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் எப்படியோ ஒரு காவல் நிலையத்தை அடைந்து பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications