அருணாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்... அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்
அருணாசலப் பிரதேசத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
Subscribe to Oneindia Tamil
இட்டாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை 11.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

வடகிழக்கு மாவட்டமான லோகிட்டில் இருந்து 114 கி.மீ. தொலைவில் உள்ள தேஜூ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க சேதவிவரம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications