வன்புணர்வு செய்யப்பட்டு கொலை.. மே.வங்கத்தில் பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. மக்கள் போராட்டம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அங்கு கடுமையான கலவரம் ஏற்பட்டு உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் சோனாப்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலிகுரி அருகே இருக்கும் இந்த கிராமத்தில் கழிப்பறைக்கு சென்ற 10ம் வகுப்பு பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

மரத்திற்கு அடியில் இந்த சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் கண்டிபிடிக்கப்பட்ட செருப்பு உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் எடுத்து சென்று விசாரித்து வருகிறார்கள். போலீசார் இதில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று கூறி இன்று அங்கு கடுமையான கலவரம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய கலவரம் இரவு வரை நடந்தது. அங்கு இதனால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

சிலிகுரி பகுதியில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் கலவரம் நடந்தது. அங்கு வந்த போலீசார் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் உள்ளது. இதில் மூன்று போலீஸ் வாகனங்கள், ஒரு அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதியே கலவர காடாக மாறியது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications