வெளியே சொன்னால் நரகத்துக்கு போவாய்.. நோயுற்ற சிறுமியை 3 மாதம் பலாத்காரம் செய்த பாதிரியார்!
வெளியே சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று மிரட்டி நோயுற்ற சிறுமியை பாதிரியார் ஒருவர் 3 மாதம் பலாத்காரம் செய்துள்ளார்.
Recommended Video

காக்கிநாடா: உடல்நிலை பாதித்த சிறுமியை 3 மாதம் பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார், பலாத்காரம் பற்றி வெளியே சொன்னால் நீ நரகத்துக்கு போவாய் என்று மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவில் உள்ள ராமாராவ் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் கொர்ல பேட்டையில் உள்ள ஹவுஸ் ஆஃப் சால்வ் என்ற தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த உடல் நிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உடல்நிலை குணமாக சிறப்பு பிரார்த்தனை நடத்துவதாக பாதிரியார் கூறியுள்ளார். மேலும், சிறுமியின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று சிறப்பு பிரார்த்தனை நடத்துவதாகக் கூறி அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நரகம்
மேலும், பலாத்கார விஷயத்தை யாரிடமாவது கூறினால், நீ நரகத்துக்கு போவாய் என்று பாதிரியார் சிறுமியை மிரட்டியுள்ளார். இப்படி 3 மாத காலமாக உடல்நிலை சரியில்லாத சிறுமியை அந்த பாதிரியார் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.

பெற்றோர் புகார்
ஒரு கட்டத்தில் பாதிரியாரின் பாலியல் பலாத்காரத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள், காக்கிநாடா போலீஸில் அந்த பாதிரியார் மீது புகார் அளித்துள்ளனர்.

போக்சோ சட்டம்
புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீஸார் பாதிரியார் ஜோஷ்வா மீது சிறுமியை பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பாவமன்னிப்பு
கேரளாவில் பாதிரியார்கள் பாவமன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உடல் நிலை சரியில்லாத சிறுமியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications