பலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்!
அகார்தலா: திரிபுராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ தன்மீது பலாத்கார புகார் கூறிய பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுரா மக்கள் முன்னணி கட்சியும் கூட்டணியில் உள்ளது.
ஆளும் கூட்டணியில் உள்ள திரிபுரா மக்கள் முன்னணி கட்சியின் ரைமா பள்ளத்தாக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தனஞ்ஜய். 28 வயதே ஆன இளம் எம்எல்ஏ ஆவர்.

எம்எல்ஏ ஏமாற்றி விட்டார்
இவர் மீது கடந்த 20ஆம் தேதி அகார்தலா மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் எம்எல்ஏ தனஞ்ஜய் தன்னை பலாத்காரம் செய்து விட்டார் என்றும் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றும் கூறியிருந்தார்.

தனஞ்ஜய் மீது வழக்குப்பதிவு
இந்த விவகாரம் திரிபுராவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து அகார்தலா போலீசார் எம்எல்ஏ தனஞ்ஜய் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமீன் கோரி மனு
இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சமாதான முடிவு
அந்த மனுவை கடந்த ஒன்றாம் தேதி விசாரித்த திரிபுரா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முடிவுக்கு வந்தனர்.

புகார் கூறிய பெண்ணுடன் திருமணம்
இந்நிலையில் அகார்தலாவில் உள்ள சத்துர்தாஸ் தேவதா கோவிலில் எம்எல்ஏ தன் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்துக்கொண்டார். இதனை எம்எல்ஏ தனஞ்ஜய் செய்தியாளர்களிடமும் அறிவித்தார்.

போலீஸ்க்கு போக மாட்டார்கள்
இதுதொடர்பாக பேசிய எம்எல்ஏவின் வழக்கறிஞர் அமித் தெப்பர்மா, இருதரப்பினரும் சமாதான பேச்சுக்கு முன்வந்ததால் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும் இனி ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளிக்க மாட்டர்கள் என்றும் அவர் கூறினார்.

வேறு வழியில்லாமல் திருமணம்
தற்போது மணப்பெண் தலாய் மாவட்டத்தில் உள்ள கண்டசெரா பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இன்று திருமணத்தை பதிவு செய்து அதற்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இருப்பினும் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி எம்எல்ஏ புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications