6 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு.. இளம்பெண் அதிகாரி மீது புகார்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் 6 தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக இளம்பெண் அதிகாரி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது கொரோனாவில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
கொடிய கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

விலங்குகளை துன்புறுத்தல்
இப்படிபட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் சிலர் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாய், பூனை போன்ற செல்லபிராணிகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்துகின்றனர். கேரளாவிலும், தமிழகத்திலும் யானைகளை துன்புறுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் 6 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இளம்பெண் அதிகாரி புகார்
ஒடிசா மாநிலம் புர்லா மாவட்டத்தில் மகாநதி நிலக்கரி நிறுவன வளாகம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிந்தன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் அதிகாரி ஒருவர் இந்த தெருநாய்கள் தனது காரின் இருக்கையை சேதப்படுத்தி விட்டதாக நிறுவன பாதுகாவர்களிடம் புகார் கூறினார்..

பரிதாபமாக இறந்த தெரு நாய்கள்
இதனை தொடர்ந்து மறுநாளே அந்த பெண் அதிகாரியின் வீட்டின் முன்பு 6 தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. பெண் புகார் கூறிய மறுநாளே நாய்கள் இறந்து கிடந்ததனால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பாக புர்லா காவல் நிலையத்தில் மகாநதி நிலக்கரி நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரி புகார் செய்தார்.

மேனகா காந்தி களமிறங்கினார்
சம்பல்பூர் மாவட்ட விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களும் புகார் அளித்து இருந்தனர். ஆனால் அந்த பெண் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விலங்குகள் நல வாரிய தலைவரும், மக்களவை எம்.பி.யுமான மேனகா காந்தி, சம்பல்பூர் எஸ்.பி.யிடம் பேசி இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். மேலும் பர்லா காவல் நிலைய இன்ஸ்பெக்டருடனும் பேசினார். இதனையடுத்து தெரு நாய்கள் இறந்து கிடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications