கோவாவில் முதல் முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி… ஒரு ‘சீட்’ கூட கிடைக்கல
யூனியன் பிரதேசமான கோவாவில் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
பனாஜி: கோவா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு இடத்தைக் கூட ஆம் ஆத்மி கட்சி பெறவில்லை.
கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக, ஆண்ட கட்சியான காங்கிரஸ் எதிர் எதிராக நின்று தேர்தலில் களம் கண்டன. முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலில் களம் கண்டது.
கோவாவில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெற முடியவில்லை.

ஊழல் ஒழிப்பு
கோவா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டது. அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு 90 நாட்களில் அமைப்பு முறை கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக கண்காணிப்பை அதிகரிப்பது, மின்னணு ஆளுகையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் எல்விஸ் கோம்ஸ் கூறினார்.

நிலமோசடி வழக்கு
இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நில மோசடி வழக்கு ஒன்றும் உள்ளது. கோவா மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக, திட்டமிட்டே பழி வாங்கும் நடவடிக்கையாக எல்விஸ் கோம்ஸ் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

ஒரு ‘சீட்’டும் இல்லை
53 வயதாகும் எல்விஸ் கோம்ஸ், கோவா சிறைத்துறை முன்னாள் ஐ.ஜி.யாக இருந்து, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர்தான் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியால் அறிவிக்கப்பட்டார். அவர் கூட வெற்றியை பெறவில்லை என்பதுதான் சோகம்.

நேருக்கு நேர்
முதல் முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை. அங்கு நேரடியாக பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலோன போட்டியாகவே உள்ளன. அங்கு காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications