ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 2 பேர் சஸ்பெண்ட்... கட்சி விரோத செயல்களால் நடவடிக்கை
டெல்லி : ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 2 பேரை கட்சி விரோத செயல்பாடுகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியலா மக்களவை தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான தரமவீர காந்தி, மற்றும் பதேகர் சாஹிப் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரீந்தர் சிங் கல்சா ஆகியோர், கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமவீரகாந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவுக்கு ஆதரவாக பேசியதாகவும், ஹரீந்தர் சிங் கல்சா கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் கட்சியிலி இருந்து இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் மீதான புகார்கள் குறித்து கட்சியின் தேசிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தமே 4 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications