டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை... வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்களை தானே முன்வந்து நீதிமன்றம் தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜுன் முதல் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டிருந்தன.

இருப்பினும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வழக்கறிஞர்கள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதற்காக தற்போது வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று கூறினார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-ந்தேதி மீண்டும் நடைபெறுகிறது.
-
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications