அசாமில் அகர்தலா-எல்டிடி விரைவு ரயில் தடம் புரண்டது! விபத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில அகர்தலா-எல்டிடி பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. சென்னைக்கு அருகே ரயில் விபத்தில் சிக்கிய ஒரு சில நாட்களில் அசாமில் மற்றொரு ரயில் விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திரிபுரா மாநிலத்திலிருந்து மும்பைக்கு அகர்தலா-எல்டிடி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அசாம் மாநிலம் திபோலங் ரயில் நிலத்திற்கு வந்தபோது தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. ரயிலின் என்ஜின் உட்பட 8 பெட்கள் தடம்புரண்டு உள்ளன. இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக லும்திங் - பாடர்பூர் சிங் லைன் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications