ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிக்கிய சிறுவர்கள்.. உபியை அதிரவைத்த பகீர் சம்பவம்
ஆக்ரா: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தலித் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள், அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்குக்கு பிறகு, வட இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 13 வயது தலித் சிறுமியை, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் மூன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது மாணவன் தலைமறைவாகியுள்ளான். அவனை தேடி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில, மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு காரில் வந்த சிறுமிக்கு தெரிந்த உள்ளூர் சிறுவர்கள் பாட்டிலில் தண்ணீர் கொடுத்துள்ளனர். சிறுமி எதுவும் யோசிக்காமல் அதை குடித்துள்ளார்.
அதை குடித்த உடனே சிறுமிக்கு தலை சுற்றி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சமயம் பார்த்து காத்திருந்த சிறுவர்கள், சிறுமியை காரில் ஏற்றி காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். பிறகு அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து சிறுமியை ஒரு மேம்பாலத்தின் அருகே தள்ளி விட்டு, சிறுவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்த பிறகு சிறுமி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளதால், இந்த சம்பவத்தை வீட்டில் இருப்போரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து இந்தப் பிரச்னை குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போக்சோ, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தப்பித்த மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
விசாரணையில் சிறுமிக்கு, தண்ணீரில் போதை மருந்து கலக்கி கொடுத்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ள காவல்துறையினர், சிறுமிக்கு உளவியல் ஆலோசனை செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி வாங்கித்தருவதுடன், மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications