கருப்பு பண முதலைகள் பட்டியலை உலகுக்கு அம்பலப்படுத்தியவர் பிரதமர் மோடிக்கு கடிதம்
டெல்லி: கருப்பு பண விவகாரத்தை அம்பலப்படுத்திய ஹெர்வி ஃபல்சியானி சுவிட்சர்லாந்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஹெர்வி பல்சியானி. இவர்தான் ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியிருக்கும் வெளிநாட்டினர் பட்டியலை ரகசியமாக வெளியிட்டவர்.

இவர் வெளியிட்ட இருந்த 628 பேரின் இந்தியரின் பெயரைத்தான் பிரான்ஸ், இந்தியாவிடம் வழங்கியது. இதனை வைத்தே இந்திய அரசும் விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார். இதையொட்டி பிரதமர் மோடிக்கு ஹெர்வி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கருப்பு பண விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள 4 பரிந்துரைகளை ஹெர்வி குறிப்பிட்டுள்ளார். அரசுகளுக்கு இடையே வெளிப்படையாக தகவல் பரிமாற்றம், கருப்பு பணம் குறித்து தகவல் தருவோரை பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்கள் அந்த பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன.











Click it and Unblock the Notifications