விமானப்படை வீரரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி
டெல்லி: டெல்லியில் 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் விமானப்படை வீரர் ரமேஷ் சந்திரா(40). அவருக்கும் சுதாவுக்கும்(28) கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். டெல்லி கண்டோன்மென்ட் அருகே உள்ள சுப்ரதோ பார்க்கில் விமானப்படை வீரர்களுக்கு அரசு அளித்துள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஆசிரியை ஆக உள்ள சுதா கடந்த மாதம் 10ம் தேதி தனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நெஞ்சு வலி என்று கூறியவர் மயங்கிவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுதா தனது 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் சுதாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் சுதா கூறுகையில்,
2008ம் ஆண்டு திருமணம் நடந்ததில் இருந்து செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இல்லை. ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. முதுகலைப்பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த நான் என்ஜினியரிங் பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றினேன். அங்கு தான் விமானப்படை ஊழியரின் மகனான அந்த 17 வயது சிறுவனை சந்தித்தேன். அவன் என் மீது காதல் வயப்பட்டு அதை தெரிவித்தான் என்றார்.
ரமேஷ் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பது குறித்து அறிந்து அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல சுதா முடிவு செய்தார்.












Click it and Unblock the Notifications