1 மணிக்கு பதில் 10.15க்கு ஆஸி.க்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்: கிரிக்கெட் பயணிகள் பெரும் ரகளை
டெல்லி: சனிக்கிழமை டெல்லியில் இருந்து சிட்னி கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் 9 மணிநேரத்திற்கும் மேல் தாமதமாக கிளம்பியது. இதனால் அடிலெய்டில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியை காண முடியாது என்ற கோபத்தில் ரசிகர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து சிட்னி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அடிலெய்ட் செல்ல சனிக்கிழமை விமான நிலையத்திற்கு வந்தனர்.

மதியம் 1 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் சிப்பந்திகள் தட்டுப்பாட்டால் கிளம்பாமல் நின்று கொண்டிருக்கிறது. இந்த விமானத்தில் கிளம்ப பயணிகள் காலை 10 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். மதியம் 1 மணிக்கு கிளம்பினால் தான் 12 மணிநேரம் பயணம் செய்து அடிலெய்ட் நகரை உரிய நேரத்தில் அடைய முடியும். ஆனால் விமானம் கிளம்ப தாமதமாகும் என்று மட்டுமே பல முறை அறிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து ரகளையில் ஈடுபட்டனர். மாலை வரை பயணிகள் போராட்டம் நடத்தனர். இறுதியாக விமானம் இரவு 10.15 மணிக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் கிளம்பிய ரசிகர்களால் இன்று மதியம் வரை அடிலெய்ட் நகரை அடைய முடியாது. அவர்களால் இந்திய அணியின் ஆட்டத்தை காண முடியாது.
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,
நாங்கள் 8 பேர் அடிலெய்டில் நடக்கும் போட்டியை காண செல்கிறோம். விமான டிக்கெட்டுக்கு ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் செலவு செய்துள்ளோம் என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications