ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை.. ஜூன் 5ல் ஆஜராக உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஜூன் 5ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இன்று நீதிபதி ஷைனி அமர்வு இதை விசாரித்தது. சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஜூன் 5ம் தேதிவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூன் 5ம் தேதி, கோர்ட்டில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications