அயோத்தி ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்- சர்ச்சை கருத்தால் உ.பி. அமைச்சர் அதிரடி டிஸ்மிஸ்
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்று பேசிய உத்தரப்பிரதேசத்தின் சர்ச்சை அமைச்சர் ஒம்பால் நெக்ராவை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கற்களை விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் கொட்டி வருகின்றனர். அத்துடன் ராமர் கோவில் கட்டுவதற்கான சிக்னல் பிரதமர் மோடியிடம் இருந்து வந்துவிட்டதாகவும் இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இது நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பிஜூனூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் ஒம்பால் நெக்ரா, அயோத்தியில் ராமர் கோவில், மதுராஅவில் கிருஷ்ணர் கோவிலைக் கட்டுவதற்கு அதாவது கரசேவை செய்வதற்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் முன்வர வேண்டும் எனக் கூறியிருந்தார்.
நெக்ராவின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நெக்ராவோ தம்முடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து நெக்ராவை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.












Click it and Unblock the Notifications