ஹரியானா வன்முறை.. நூ மாவட்ட எஸ்பி இடமாற்றம்.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை! சாட்டையை சுழற்றிய மாநில அரசு
சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக நூ மாவட்ட எஸ்பி வருண் சிங்லா மீது அதிரடியாக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை பணியிடமாற்றம் செய்துள்ள மாநில அரசுக்கு புதிதாக அந்த மாவட்டத்துக்கு ‛எக்ஸ்பர்ட்' ஒருவரை நியமனம் செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் தான் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தின்போது கல் வீசி தாக்கினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரையொரும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் வன்முறையாக மாறியது. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த வன்முறையில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பிற மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்னறர். அதன்படி நூ, பரிதாபாத், பல்வால் உள்பட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
மேலும் பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. வன்மறை தொடர்பாக மொத்தம் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நூ மற்றும் குர்கிராம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க வன்முறை நடக்கும் நூ மாவட்ட எஸ்பியின் மீது மாநில உள்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நூ மாவட்ட எஸ்பியாக உள்ள வருண் சிங்லா அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நூ மாவட்டத்தில் இருந்து பீவானி மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக நூ மாவட்ட எஸ்பியாக நரேந்திர பீஜார்னியா நூ மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த மாவட்ட எஸ்பியாக பணியாற்றி அனுபவம் கொண்டவர். மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் புரிந்து வைத்துள்ள நபராக இருக்கிறார். இதனால் தான் நூ மாவட்டத்தில் வன்முறை தொடங்கிய நிலையில் நரேந்திர பீஜார்னியாவுக்கு நூ மாவட்டம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் அவர் தற்போது நூ மாவட்டத்தின் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications