அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.. மியான்மரிலும் நிலஅதிர்வு
Subscribe to Oneindia Tamil
அந்தமான்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் சமீப நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் சின்ன சின்ன நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.4 .3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை. அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் இதனால் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் சிறிய அளவில் அதிர்வுகள் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications