தெலுங்கானா அரசுப் பணிகளில் சீமாந்திராவினருக்கு இடமில்லை: சந்திரசேகர் ராவின் சர்ச்சை பேச்சு
ஹைதராபாத்: தெலுங்கானா அரசுப் பணிகளில் சீமாந்திராவினருக்கு இடமில்லை என்று அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.
புதிய மாநிலமாக ஜூன் 2-ந் தேதி உதயமாகும் தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்க உள்ளார். அவர் அரசு பணியாளர்களிடையே பேசிய போது, சீமாந்திராவை சேர்ந்த அரசு பணியாளர்கள் தெலுங்கானா அரசில் இணையக் கூடாது.
அப்படி இணைந்தால் எப்படி தெலுங்கானா அரசுப் பணி ரகசியத்தை காப்பாற்றுவார்கள்? அதனால் அவர்களுக்கு இடம் கிடையாது என்று கூறினார்.
சந்திரசேகர் ராவின் இந்த பேச்சுக்கு சீமாந்திராவின் முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒருவர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.