டாஸ்மாக் பார்முலாவில் ஆந்திராவில் அரசு மதுக்கடைகள் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவில் விரைவில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், "தமிழ்நாட்டில் எற்கனவே மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு பாணியில் ஆந்திராவிலும் மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஆந்திராவில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் இனி அரசே நடத்தும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications