காங். மீதான மக்கள் கோபம்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு- ஹஸாரே
டெல்லி: காங்கிரஸ் மீது மக்கள் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
டெல்லி உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றி குறித்து ஹஸாரே கருத்து தெரிவித்துள்ளார்.
இ

துகுறித்து அவர் கூறுகையில், அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி சட்டசபையில், யாருக்கும் ஆதரவு தரக் கூடாது. பாஜகவுடனும் சேரக் கூடாது, காங்கிரஸுடனும் சேரக் கூடாது. அப்படி சேர்ந்தால், கூட்டணி அமைத்தால் அது பெரும் குழப்பமாகி விடும்.
இன்றைய முடிவுகள், மக்கள் எந்த அளவுக்கு காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது மக்களின் கோபம்.
டெல்லியில் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது காங்கிரஸ் அரசுக்கு மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும்.
கேஜ்ரிவால் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றிக்காக மகிழ்கிறேன். கேஜ்ரிவாலைப் பாராட்டுகிறேன் என்றார் அன்னா.












Click it and Unblock the Notifications