"நீ பிராமினா.. உதட்டில் என்ன போட்டு இருக்க." வைவாவில் அத்துமீறி கேள்வி! மே.வங்கத்தில் மீண்டும் பகீர்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவாவின் போது முறையற்ற கேள்விகள் கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைவாவின் போது அந்த பெண்ணிடம் நீ பிராமினா.. முகத்திற்கு எந்த க்ரீம் யூஸ் பண்ற என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

west bengal hospital

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் உள்ள மற்றொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவா தேர்வின் போது மாணவி ஒருவரிடம் கேட்ட கேள்விகள் சர்ச்சையாக வெடித்துள்ளது.

வைவா கேள்வி: வைவாவுக்கு வந்த ஆசிரியர் முறையற்ற கேள்விகளைக் கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில ஊடகப் பொறுப்பாளர் பகிர்ந்துள்ளார். அதில் வைவாவின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வது தெளிவாகத் தெரிகிறது.

அங்குள்ள சாகர் தத் மருத்துவக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகப் பரவும் வீடியோவில் ஒரு பெண், "எனக்கு முன்னால் வந்த ஆணுக்கு சில நிமிடங்களில் வைவா முடிந்துவிட்டது. அதேபோல எனக்குப் பிறகு வந்த ஆணுக்கும் சில நிமிடங்களில் வைவா முடிந்துவிட்டது. ஆனால், என்னிடம் மட்டும் சம்பந்தமே இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டார்.

"ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்.." கொல்கத்தா மருத்துவர் கொலை.. கண்ணீர் விட்டு கதறிய தந்தை


நீ பிராமினா: குடும்ப உறுப்பினர்கள் குறித்து எல்லாம் கேட்டார்கள்.. அது கூட ஓகே.. அதன் பிறகு கேட்ட கேள்வி தான் மோசம்.. நீ ஒரு பிராமினா? இப்போ முகத்தில் என்ன கிரீம் போட்டு இருக்க? என்று கேட்கிறார். அது மட்டுமின்றி உதட்டில் என்ன போட்டு இருக்க என்று அத்துமீறிக் கேட்கிறார். இது வைவா தேர்வா இல்லை வேறு எதாவது" என்று சரமாரியாகக் கேட்கிறார்.

அந்த வீடியோவில் மாணவிக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதே கல்லூரியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு வன்முறை நடந்தது. வகுப்பறைகள் மற்றும் விடுதிகளை அடித்து நொறுக்கினர். வெளியாட்களுடன் சேர்ந்த சில மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதற்கு அந்த முதல்வர் கூறியிருந்தார். கடந்த வாரம் கல்லூரி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்த வன்முறை நடந்தது.

வெடித்த போராட்டம்:
கல்லூரியில் முறையான தங்கும் விடுதி இல்லை.. மாணவர்களுக்கு விடுதி அறைகளை ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் அங்குப் போராட்டம் நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்தே கலவரம் நடந்தது. இதற்கிடையே இப்போது அங்குப் பெண் மாணவி ஒருவரிடம் வைவாவின் போது அத்துமீறிக் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+