மயக்க மருந்து கொடுத்து டாக்டரை பலாத்காரம் செய்த பிரிகேடியர்.. விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மீது ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புகாருக்குள்ளாகியுள்ள அதிகாரியின் பெயர் மனோஜ் திவாரி. இவர் பிரிகேடியர் அந்தஸ்தில் இருப்பவர். தற்போது ராணுவப் போர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஐ.நா.வில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ராணுவப் பிரிவில் பணியில் இரு்தார். அபபோது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சர்ச்சை வெடித்தது.
அப்போது அவர் கர்னல் பொறுப்பில் இருந்து வந்தார். சம்பந்தப்பட்ட பெண் டாக்டரிடம் தனக்குத் திருமணமானதை மறைத்து அவரை நைசாசகப் பேசி தனது அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும், அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நாடு திரும்பிய அவர் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் இந்திய ராணுவத் தலைமைக்கு புகார் அனுப்பினார். அதில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக மனோஜ் திவாரி உறுதி அளித்ததாகவும், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது திவாரி மீது ராணுவ கோர்ட் விசாரணைக்கு ராணுவத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications