காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு செல்லுமா, செல்லாதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு செல்லுமா, செல்லாதா என்பது குறித்த முக்கிய வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு விசாரணையை குறைந்தது 6 மாதங்களாவது ஒத்தி வைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

1954ம் ஆண்டு சட்டப்ப்பிரிவு 35-ஏ என்பது அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதாகும். இதன் படி மாநில சட்டசபை சம உரிமை, சமத்துவம் ஆகியவற்றை பாதிக்காதவாறு எந்த ஒரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.
சட்டப்பிரிவு 35-ஏ காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரக் குடிகள் என்ற விஷயத்தை கையாளும் சட்டப்பிரிவு. இதன் படி மாநிலத்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருக்கும் பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால் இந்தப் பெண்ணுக்கும் இவரது வாரிசுக்கும் சொத்துரிமை கிடையாது, சொத்துக்களில் பங்கு கிடையாது என்ற ஷரத்து உள்ளது.
இந்த சட்டப்பிரிவு செல்லாது என அறிவிக்க கோரி டெல்லியை சேர்ந்த என்ஜிஓ 'வீ தி சிட்டிசன்ஸ்' அமைப்பு 2014ல் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தது. இதன்பிறகு மேலும் மூவரும் இதுபோல மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வழக்கை மேலும் 6 மாதங்கள் ஒத்தி வைக்க கோரிக்கைவிடுத்தது. ஆனால் நீதிமன்றம், 8 வாரங்கள் கழித்து விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications