காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு செல்லுமா, செல்லாதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு செல்லுமா, செல்லாதா என்பது குறித்த முக்கிய வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு விசாரணையை குறைந்தது 6 மாதங்களாவது ஒத்தி வைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

1954ம் ஆண்டு சட்டப்ப்பிரிவு 35-ஏ என்பது அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதாகும். இதன் படி மாநில சட்டசபை சம உரிமை, சமத்துவம் ஆகியவற்றை பாதிக்காதவாறு எந்த ஒரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.
சட்டப்பிரிவு 35-ஏ காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரக் குடிகள் என்ற விஷயத்தை கையாளும் சட்டப்பிரிவு. இதன் படி மாநிலத்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருக்கும் பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால் இந்தப் பெண்ணுக்கும் இவரது வாரிசுக்கும் சொத்துரிமை கிடையாது, சொத்துக்களில் பங்கு கிடையாது என்ற ஷரத்து உள்ளது.
இந்த சட்டப்பிரிவு செல்லாது என அறிவிக்க கோரி டெல்லியை சேர்ந்த என்ஜிஓ 'வீ தி சிட்டிசன்ஸ்' அமைப்பு 2014ல் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தது. இதன்பிறகு மேலும் மூவரும் இதுபோல மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வழக்கை மேலும் 6 மாதங்கள் ஒத்தி வைக்க கோரிக்கைவிடுத்தது. ஆனால் நீதிமன்றம், 8 வாரங்கள் கழித்து விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications