அமிர்தசரஸில் பிரசாரம் செய்த அருண் ஜேட்லி கூட்டத்தில் கேஸ் பலூன் வெடித்தது

வழக்காக அமிர்தசரஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துதான் போட்டியிடுவார். ஆனால் இந்த முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டு விட்டது. ஜேட்லி நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் சித்து அப்செட்டில் இருக்கிறார்.
இந்த நிலையில் ஜேட்லி இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார். இதற்காக தொகுதிக்குச் சென்ற அவரை வரவேற்க சித்து போகவில்லை. மாறாக தனது மனைவி நவ்ஜோத் கவுரை அனுப்பியிருந்தார். அவர் சித்துவின் ஆதரவாளர்களுடன் போய் ஜேட்லியை வரவேற்றார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஜேட்லி பேசினார். அந்த சமயத்தில் திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் பலூன் வெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த பரபரப்பை விட சித்து வராததே பெரும் பரபரப்பாக இருந்தது. சித்துவின் மனைவி கவுர் தற்போது அமிர்தசரஸ் கிழக்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூட்டத்தில் ஜேட்லி பேசுகையில், நான் அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறேன். எனக்கு அமிர்தசரஸ் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications