ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட வேண்டியதுதான்... ஜோதிர் ஆதித்யா சிந்தியா

இதுகுறித்து டெல்லியில் அவர் பேசுகையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து வி்ட்டால் நிச்சயம் பெரும் மாற்றம் ஏற்படும். அது பெரிய மாற்றத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்த உதவும். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு லோக்சபா தேர்தலை சந்தித்தால் அது நிச்சயம் காங்கிரஸுக்குப் பலன் தரும் என்றார் ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
அவர் மேலும் கூறுகையில், இதுதொடர்பாக நாம் அவசரமாக முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சில நாட்களில் இதைச் செய்தாக வேண்டும். நமக்கு லோக்சபா தேர்தலுக்கான அவகாசம் குறைவாகவே உள்ளது என்றார் சிந்தியா.
பாஜக ஏற்கனவே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து படு வேகமாக பிரசாரத்திலும் குதித்து விட்டது. ஆனால் காங்கிரஸ் அப்படி அறிவிக்காது என்று அக்கட்சி ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் அடுத்து ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று காங்கிரஸார் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனால் குழப்பமே காணப்படுகிறது.
இந்த நிலையில்தான் நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டது. காங்கிரஸ் 3 மாநிலங்களில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.
தற்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள சிந்தியாதான், மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்காக தலைமை தாங்கி பிரசாரம் செய்தவர் ஆவார். ஆனால் அங்கு காங்கிரஸ் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications