ராஜ்தானி ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம்: டிக்கெட் பரிசோதகர் மீது ரயில்வே போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: ராஜஸ்தானி ரயிலில் பெண் பயணியிடம் பாலியல் குறும்பு செய்ததாக அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் மீது பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவர் புகார் தெரிவித்துள்ளார்.

திருமணமான 32 வயது பெண் ஒருவர் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கவுகாத்தியிலிருந்து கான்பூர் செல்வதற்காக பயணம் செய்துள்ளார். அவரிடம் ஓடும் ரயிலில் பாரத் சந்திரா பாசு என்ற டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தைகள் கூறி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

உடனடியாக பாதிக்கப்பட்டப் பெண் தொலைபேசி மூலம் தனது கணவரைத் தொடர்பு கொண்டு டிக்கெட் பரிசோதரின் தகாத நடவடிக்கையை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது கணவர் சம்பந்தப் பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது அருகிலிருந்த ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நியூ ஜால்பைகுரி ஸ்டேஷனில் நிறுத்தப் பட்ட ரயிலில் ரயில்வே போலீசார் சம்பந்தப் பட்ட டிக்கெட் பரிசோதகரைத் தேடியுள்ளனர். ஆனால், அதற்குள் அந்த டிக்கெட் பரிசோதகர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+