ஒரு நாள் ஜனாதிபதி ஆவாய்.. ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் சொன்ன ராஜஸ்தான் ஜோதிடர்!
டெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்வீர்கள் என்று ஜோசியம் கூறியுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்குத் தனது கணவர் ஜூபின் இராணியுடன் சென்றிருந்தார் ஸ்மிருதி. அங்கு பண்டிட் நாதுலால் வியாஸ் என்ற ஜோதிடரை அவர் சந்தித்தார். அவரிடம் தனது எதிர்காலம் குரித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டார்.

இதையடுத்து இராணியின் ஜாகத்தைப் பார்த்து அவருக்குப் பல்வேறு கணிப்புகளைக் கூறினார் வியாஸ். அதில் முக்கியமானது, ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக ஸ்மிருதி உயர்வார் என்பது.
இதே வியாஸ்தான் முன்பும் கூட, ஸ்மிருதி அரசியலில் உயரிய இடத்திற்கு வருவார், அமைச்சர் ஆவார் என்று ஆரூடம் கூறியவராம். எனவே வியாஸ் மீது ஸ்மிருதிக்கு தனி மரியாதை உண்டு.
தற்போது வியாஸை சந்தித்த ஸ்மிருதி, நான்கு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்டாராம் ஸ்மிருதி. மேலும் இதற்கு முன்பு தனக்கு சரியான முறையில் கணிப்புகளைச் சொன்னதற்காக நன்றியும் கூறிக் கொண்டாராம் ஸ்மிருதி.
இந்த சந்திப்பு குறித்து ஸ்மிருதியிடம் டிவி செய்தியாளர்கள் சிலர் கேட்டபோது, இன்று உங்களுக்கு நல்ல டிஆர்பி கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிரித்தபடி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து மீடியாக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம், உங்களது தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து என்னை வைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன் என்றார் இராணி.
ஆனால் இதே ஜோதிடர் வியாஸ்தான் முன்பு இராணிக்கு சிறந்த எதிர்காலம் இல்லை என்றும் கணித்தவர் ஆவார். இருப்பினும் பின்னர் இவரே இராணியை அழைத்து நல்ல எதிர்காலம் உள்ளது, மத்தியில் அமைச்சர் ஆவாய் என்றும் வாழ்த்தினார்.
நேற்றைய சந்திப்பின்போது இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு நாள் வருவாய் என்று வாழ்த்தினாராம் வியாஸ்.
இராணியின் இந்த ஜோதிடர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் கூட்டாளியான சிவசேனாவின் சஞ்சய் ராத் கூறுகையில், ஜோதிடம் என்பது சாஸ்திரம். யார் வேண்டுமானாலும் அதை நம்பலாம், பின்பற்றலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அதில் குறை கண்டுபிடிக்கவும் தேவையில்லை என்றார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications