பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று தொடங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இது வழக்கமான நடைமுறைதான். எனவே, இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.50,000 பிணைத்தொகையின் பேரில் இவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் இவர்களை போலீசார் கைது செய்வது தடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications