For Daily Alerts
Just In
உ.பி.யில் பயங்கரம்... மதம் மாற்றிய நபரை மொட்டை போட்டு கழுதையில் ஏற்றிய பஜ்ரங்தள் தொண்டர்கள்
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இந்து மதத்தினரை மதம் மாற்றியதாக கூறி ஒருவரை பஜ்ரங்தள் தொண்டர்கள் மொட்டை போட்டு கழுதையில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாவட்டம் ஓராய் கொட்வாலியைச் சேர்ந்த அவ்தேஷ் சவிதா மீது மதமாற்றப் புகார் கூறப்பட்டது. இந்துக்கள் 3 பேரை அவர் மத மாற்றம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.
இதனைக் கண்டித்து பஜ்ரங்தளம் தொண்டர்கள் அவ்தேஷ் வீட்டின் முன்பு திரண்டனர். வீட்டுக்குள் இருந்து வெளியே வர மறுத்த அவ்தேஷை வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கினர்.
தலையை ஒரு பகுதியில் மொட்டை அடித்து கழுத்தில் செருப்பு மாலை போட்டு கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவ்தேஷை மீட்டனர்.
மேலும் இது தொடர்பாக பஜ்ரங் தளத்தினர் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
English summary
In a bizarre incident of public shaming, Bajrang Dal activists shaved a man's head and paraded him on a donkey in Jalaun village in Uttar Pradesh.
Story first published: Saturday, January 30, 2016, 14:02 [IST]