நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்குத் தடை- மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை
டெல்லி : நெடுஞ்சாலைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை விபத்துக்கள் குறித்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இக்குழு ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல பரிந்துரைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றாத்தில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்தது.
அதில், மாநில அரசுகள் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக வேகம் உள்ளிட்ட சாலை போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான பல பரிந்துரைகளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெடுஞ்சாலைகளில் மது விற்பனையைத் தடை செய்வது தொடர்பான பரிந்துரையை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications