பெங்களூரிலும் எதிரொலித்த வர்தா புயலின் தாக்கம்.. மாலை முதல் மழை பெய்கிறது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வர்தா புயல் தாக்கத்தால் பெங்களூரில் மாலை முதல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.
வர்தா புயல் சென்னை அருகே மாலை கரையை கடந்தது. முன்னதாக அதன் தாக்கத்தால் 350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெங்களூரில் காலை முதல் வானம் மேக மூட்டத்தோடு காணப்பட்டது.

புயல் கரையை கடந்த பிறகு தரைமார்க்கமாக வடமேற்கு திசையை நோக்கி பயணித்தது. எனவே அதன் தாக்கத்தால் பெங்களூரில் மாலையிலிருந்து மழை கொட்ட ஆரம்பித்தது. இதை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் டிராபிக் ஜாமில் சிக்கி அவதிப்பட்டனர்.
குளிருடன் சேர்ந்து மழையும் கொட்டியதால் பெங்களூர் மக்கள் இரவில் குளிரில் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications