ஓ காட்... இந்த டீலிங் கணபதி பேக்கரி வீரபாகுவை விட கேவலமா இருக்கே!
பாட்னா: இது ஒரு வழக்கமான கள்ளக்காதல் கதைதான்.. ஆனால் இதில் ஈடுபட்டவர்கள் அதைத் தொடர அந்த ஊர் பஞ்சாயத்து அனுமதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மாமியார், மருமகன் இடையிலான கள்ளக்காதல் இது. பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரைச் சேர்ந்தவர் 22 வயதான சுராஜ். இவரது மனைவி பெயர் லலிதா. லலிதாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மாமியார் ஆஷாவை (42) வீட்டுக்கு வரவழைத்தார் சுராஜ்.

ஆஷாவும், மகள் வீட்டுக்கு வந்து மகளைப் பார்த்துக் கொண்டார். ஆஷாவின் கணவர் டெல்லியில் வேலை பார்க்கிறார். எப்போதாவதுதான் வருவாராம். மகளைப் பார்க்க வந்த இடத்தில் சுராஜுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் ஆஷா. இருவரும் லலிதாவுக்குத் தெரியாமல் அந்தரங்கமாக இருந்துள்ளனர். அடிக்கடி வெளியிலும் போய் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் லலிதா மற்றும் ஆஷாவின் கணவர், குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் கிராமப் பஞ்சாயத்துக்கு வந்தது. பஞ்சாயத்துக் கும்பல் கூடி இதில் என்ன தவறு இருக்கிறது, இருவரும் விரும்பித்தானே பழகினர், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறி விட்டுப் போய் விட்டனர்.
பஞ்சாயத்தே அனுமதி வழங்கி விட்டதால் தற்பது ஆஷாவும், சுராஜும் தங்களது ஊருக்கே வந்து பகிரங்கமாக ஜோடி போட்டுத் திரிய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் எனது மகளும் வந்து என்னுடன் சேர்ந்து வாழலாம் என்று அழைப்பு விடுத்துள்ளாராம் ஆஷா!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications