என்ன கொடுமை.. இறந்தவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துப் போன போலீஸ்!
வைஷாலி, பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி நகரில் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார், அந்த நபரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரையோடு தரையாக இழுத்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைஷாலி நகரில் உள்ள கங்கையாற்றில் மூழ்கி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இறந்த நபரின் கழுத்தில் பெரிய கயிற்றைக் கட்டி கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்றனர். இதை அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

இத்தனைக்கும் ஆற்றில் அந்த நபர் விழுந்ததுமே போலீஸாருக்குத் தகவல் போனது. ஆனால் போலீஸார் 2 மணி நேரம் கழித்துத்தான் வந்துள்ளனர். இதனால் ஆற்றில் மூழ்கிய நபரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. லேட்டாக வந்ததோடு, உடலை கயிற்றைக் கட்டி போலீஸார் இழுத்த செயல் அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் கிடைக்காததாலும், உடலைத் தூக்கிச் செல்ல ஆட்கள் கிடைக்கவில்லை என்பதாலும் இப்படி கயிற்றைக் கட்டி இழுத்து தங்களது மனிதாபிமானமற்ற வெளிக்காட்டியுள்ளனர் அந்த போலீஸார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து தற்போது இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில்தான் ஒடிஷா மாநிலத்தில் ஒரு கணவர் தனது இறந்த மனைவியின் உடலை தோலில் தூக்கி வைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து அது போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இறந்தவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து சலசலப்பை அதிகரித்துள்ளனர் பீகார் போலீஸார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications