சிபிஐ துறைக்கு இடமாற்றம்... மகிழ்ச்சியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட பீகார் போலீஸ்
சிபிஐ துறைக்கு இடமாற்றம் கிடைத்த மகிழ்ச்சியில் பிரிவு உபசார விழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் பீகார் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பாட்னா: பீகார் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் தான் மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரிவு உபசார விழாவில் வானத்தை நோக்கி தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயரதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27-ஆம் தேதி 70 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவிகளை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. கட்டிஹார் மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சித்தார்த் மோகன் ஜெயின். இவருக்கும் மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றல் கிடைத்தது.

வானத்தில் டுமீல் டுமீல்
இதையடுத்து அவருக்கு கட்டிஹாரில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது சந்தோஷமாக ஆட்டம் பாட்டம் என ஜெயின் இருந்தார். அப்போது திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

சமூக வலைதளங்கள்
துப்பாக்கியில் உள்ள தோட்டாக்கள் தீரும் வரை சுட்டுக் கொண்டே இருந்தார். இந்த அசம்பாவித சம்பவத்தால் அவ்வழியாக சென்றோர் மிகவும் அச்சமடைந்தனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

விசாரணைக்கு உத்தரவு
இதன்பின்னர் தகவலறிந்த பீகார் மாநில கூடுதல் டிஜிபி எஸ்.கே சிங்கால், ஜெயினை மத்திய அரசுக்கு மாற்றம் செய்யும் உத்தரவை திரும்ப பெற்று கொண்டார். மேலும் துப்பாக்கியை அபாயகரமான வகையில் பயன்படுத்தியமை குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
|
நடவடிக்கை உண்டு
இதுகுறித்து சிங்கால் கூறுகையில், என்னதான் மகிழ்ச்சியில் திளைத்தாலும் சித்தார்த் மோகன் ஜெயின் செய்ததை ஏற்க முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மத்திய அரசு பணிக்கு அவரை மாற்றும் உத்தரவும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications