ஆள் கடத்தல் கும்பல் என்று நினைத்து பெங்களூர் போலீசாரை கைது செய்த சென்னை போலீஸ்!
பெங்களூர்: கடத்தல்காரர்கள் என நினைத்து பெங்களூர் போலீஸ் ஏ.சி.பிஐ சென்னை போலீசார் கைது செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பெங்களூரிலுள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்தன. இதில் அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவிகள் சிலர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் அல்-உம்மா தீவிரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாக, கர்நாடக காவல்துறை சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக, சென்னை, கோவைக்கு அவ்வப்போது கர்நாடக காவல்துறை சென்று விசாரணை நடத்தியுள்ளது.
அதேபோல, சம்பவத்தன்று சென்னை சென்ற கர்நாடக குற்றப்பிரிவு போலீஸ் படை, குண்டு வெடிப்பு சம்மந்தமாக குற்றவாளி இருவரை ரகசியமாக கைது செய்தது.
அந்த குற்றவாளியை பெங்களூர் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட போலீசார், வாகனத்தில் பெங்களூர் நோக்கி திரும்பினர். அதற்குள்ளாக கைதான நபர்களின் குடும்பத்தார், யாரோ அவர்களை கடத்தி செல்வதாக நினைத்து குழம்பி சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெங்களூர் போலீசார் சென்ற வாகனத்தை இடைமறித்த சென்னை போலீசார், அந்த குழுவில் இருந்த உதவி கமிஷனரிடமிருந்து (ஏசிபி) ரிவால்வர் மற்றும் செல்போனை சென்னை போலீசார் பறித்துக்கொண்டதோடு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த திடீர் கைது நடவடிக்கை பெங்களூர் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே, தகவல் அறிந்த பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.ஹரிசேகரன், சென்னை போலீசாரை தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்துக்கூறியுள்ளார். ஹரிசேகரன் இயல்பில் தமிழர் என்பதால் கருத்து பரிமாற்றம் எளிதாக இருந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஏசிபியை சென்னை போலீசார் விடுவித்துள்ளனர். பெங்களூர் போலீசார் மஃப்டியில் இருந்ததால் அவர்கள் போலீசார் என கூறியதை சென்னை காவல்துறையினர் நம்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் குழப்பபத்திற்கு காரணமாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications