காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கான நிதி குறைப்பு- பா.ஜ.க அரசு மீது சோனியா குற்றச்சாட்டு
டெல்லி : காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மீது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் சிறிய மாற்றங்கள் செய்து மோடி அரசு செயல்படுத்தி வருவது பற்றி விவாதித்தோம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கான நிதி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மகளிர், குழந்தைகள் நலம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.