"கோமியம் குடித்தால் மட்டுமே நவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி.." பாஜக நிர்வாகியின் அறிவிப்பால் சர்ச்சை!
இந்தூர்: நவராத்திரி பண்டிகை வரும் அக். 3ம் தேதி முதல் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் கோமியம் குடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்துக்கள் மட்டுமே வருவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்தாண்டு அக். 3ம் தேதி முதல் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை வெகு சிறப்பாகக் கொண்டாட நாடு முழுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நவராத்திரி: அதன்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பாஜக சார்பில் நவராத்திரி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ளூர் பாஜக நிர்வாகி பிறப்பித்த உத்தரவு தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குக் கோமியம் குடிக்கும் மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அம்மாவட்ட பாஜக தலைவர் சிந்து வர்மா கூறியதே இந்த சர்ச்சைக்குக் காரணம்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்துவாக இருக்கும் யாரும் கோமியம் குடிப்பதை எதிர்க்க மாட்டார்கள் என்று தடாலடியாகப் பேசியுள்ளார் சிந்து வர்மா இது தொடர்பாக அவர் பேசுகையில், "கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பக்தர்களை அனுமதிக்கும் முன், அவர்கள் கோமியத்தைக் குடிப்பதை உறுதி செய்யுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.
இந்துக்கள் மட்டும்: இது சர்ச்சையான நிலையில், இந்துக்கள் மட்டுமே வருவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், "ஆதார் அட்டையைக் கூட திருத்த முடியும். ஆனால், ஒருவர் இந்துவாக இருந்தால் மட்டுமே அவர் கோமியத்தைக் குடிப்பார். அதன் பிறகு கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கலாம். உண்மையான இந்து கோமியம் குடிக்க மறுக்க மாட்டார்" என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளார்.
அதேநேரம் வர்மாவின் இந்த உத்தரவுக்கு உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேவையில்லாமல் நவராத்திரி பண்டிகையை வைத்து அரசியல் செய்ய முயல்வதாகவும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த பாஜக போடும் திட்டம் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.
நெட்டிசன்கள்: இணையத்திலும் நெட்டிசன்கள் இரு வேறு கருத்துகளையே கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் கோமியம் குடிப்பது இந்துக்களின் வழக்கம் தான்.. வர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை என்று கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பு பாஜக இந்து பண்டிகைகளை வைத்து அரசியல் செய்வதாகவும் இதைத் தலைமை கண்டிக்க வேண்டும் என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம்












Click it and Unblock the Notifications