ம.பி.யில் 'ஹாட்ரிக்' வெற்றி- ராஜஸ்தானில் காங்.ஐ குப்புற வீழ்த்தி ஆட்சியை பிடித்த பாஜக!!
ஜெய்ப்பூர்/போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்து மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஹாட்ரிக் மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பாஜக கூடுதல் இடங்களில் முன்னிலை வகித்தது. அம்மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

மாலை 5 மணி நிலவரப்படி 128 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸோ 29 இடங்களைத்தான் கைப்பற்றியிருந்தது.
மேலும் 63 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது. காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலை வகித்தது.
ராஜஸ்தானில் மீண்டும் பாஜக
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது.

மாலை 5 மணி நிலவரப்படி 180 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி 147 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றது. ஆளும் காங்கிரஸோ வெறும் 23 தொகுதிகளைத்தான் கைப்பற்றியது.
எஞ்சிய 19 தொகுதிகளில் பாஜக 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன.












Click it and Unblock the Notifications