தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் லஞ்சமாகாது... அது கடன்: முதல்வர் வீர்பத்ரர் விளக்கம்

இமாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் மின் நிறுவனத்திடமிருந்து, முதல்வர் வீர்பத்ர சிங், லஞ்சம் பெற்று, முறைகேடான வகையில் அந்நிறுவனத்திற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, அக்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வீரபத்ர சிங் தன் மீதான குற்றச்சாட்டை மீண்டும் மறுத்துள்ளார். தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் லஞ்சம் அல்ல, அது கடன் என அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :-
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து, என் சொந்த தேவைக்காக, பணத்தை கடனாகப் பெற்றேன். என் வயதை கருத்தில் கொண்டு, வங்கிகள் எனக்கு கடன் தர மறுத்ததால், நான் தனியார் நிறுவனத்திடம் கடன் பெறும் சூழல் ஏற்பட்டது. அத்தொகையானது, காசோலை வடிவில் பெறப்பட்டு, அவை காசோலையாகவே திருப்பித் தரப்பட்டுள்ளது.
நாட்டில் லஞ்சம் பெறும் எவரும், பணத்தை காசோலை வடிவில் பெறுவதில்லை. 2011ம் ஆண்டு, நான் மத்திய அமைச்சராக இருந்த போது, அப்பணம் பெறப்பட்டுள்ளது. அப்போது நான் மாநில முதல்வர் ஆவேன் என, நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.இமாச்சல பிரதேச மாநில அரசியலில், பா.ஜ.,வின் முன்னேற்றத்திற்கு நான் பெரும் தடைக்கல்லாக இருப்பதால், அவர்கள் என் மீது வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications