மே.வங்கம்: திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவும் 3 பாஜக எம்பிக்கள்? மத்திய குழுவை அவசரமாக அனுப்பிய டெல்லி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மமதா பானர்ஜியை திடீரென சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து டெல்லி பாஜக மேலிடம் மேற்கு வங்க மாநிலத்துக்கு அவசரமாக மத்திய குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அத்தியாயத்தையே பாஜக முடித்துவிடப் போகிறது என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவால் 12 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இதனால் கருத்து கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகிப் போகின.

பாஜக எம்பிக்கள் நிலை என்ன?: இதனிடையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பாஜகவின் 3 புதிய எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போகிறார்கள்; பாஜக எம்பிக்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திரிணாமுல் பக்கம் தாவும் பாஜக எம்பிக்கள்?: இந்த நிலையில் பாஜகவின் சவுமித்ரா கான் என்ற எம்பி, உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார். தற்போதைய லோக்சபா தேர்தலில் வெறும் 5,567 வாக்குகளில் வென்றவர் சவுமித்ரா கான். அத்துடன் நிற்காமல் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை புகழ்ந்தும் பேசி வருகிறார் சவுமித்ரா கான். இவரைப் போலவே வேறு சில பாஜக எம்பிக்களும் திரிணாமுல் காங்கிரஸை புகழ்ந்தும் பேசி வருகின்றனர்.
மமதாவை சந்தித்த பாஜக எம்பி: இதன் அடுத்த கட்டமாகவே பாஜகவின் ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து பேசியிருக்கிறார். கூச்பிகார் பகுதியை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துபவர் அனந்த் மகாராஜா. பாஜகதான் முதலில் அனந்த் மகாராஜாவை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் தற்போதைய தேர்தலில் கூச்பிகார் பகுதியில் பாஜக பெரும் பின்னடவை எதிர்கொண்டது. அனந்த் மகாராஜா இம்முறை மமதாவின் திரிணாமுல் கை கோர்த்ததுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி மத்திய குழு: அத்துடன் உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக பல இடங்களில் பாஜக தொண்டர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பாஜகவின் இருப்பு ஆட்டம் காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தாலும் பெரும்பாலான இடதுசாரிகள், பாஜகவில் இணைந்ததால் விஸ்வரூபம் பெற்றது. தற்போது திடீரென பாஜகவுக்குள் கலகக் குரல்கள் வெடிப்பதால் உடனடியாக மத்திய குழு ஒன்றை டெல்லி மேலிடம் அனுப்பி வைத்திருக்கிறது. மேற்கு வங்க பாஜக எம்பிக்களைத் தக்க வைக்கவும் உள்ளூர் பாஜக மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த டெல்லி மத்திய குழு உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்கின்றன தகவல்கள்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications